Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

செல்காலனி பகுதியில் இரயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு-ராஜா உடையார் கோரிக்கை ஏற்பு

14 Dec 2019 10:04 amFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பையில் செம்பூர் (மேற்கு) பகுதியில் உள்ள திலக் நகரிலிருந்து - செல்காலனி, செம்பூர்(கிழக்கு) பகுதிக்கு போகுவதற்கு ரயில் தண்டவாளத்தை கடந்து போகவேண்டியதை தவிர வேற வழியில்லை. ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் போது பல உயிர்கள் ரயில்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாக உள்ளது.
ஆதலால் மேற்படி ரயில் தண்டவாளத்தை கடக்காமல் செல்வதற்கு பாலம் கட்டி தரவேண்டும் என ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் நேரிடையாக சந்தித்து மத்திய ரயில்வேயின் மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜா உடையார் கோரிக்கை வைத்தார்.

மேற்படி கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே அதிகாரி திரு. என்.சி.சிரிமாலி அவர்கள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
ரயில்வே அதிகாரிகளிடம் இப்பகுதி பொது மக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள்/மாணவிகள் அனைவரும் செம்பூர் மேற்கு பகுதியில் செம்பூர் கிழக்கு பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி போகுவதற்கு சுமார் ஒரு (1.00) கி.மீ சுற்றி வரவேண்டும்.. மேற்படி பாலம் கட்டினால் இரண்டு (2.00) நிமிடத்தில் கடந்து செல்லலாம் என ராஜா உடையார் மக்கள் படும் அவதிகளை எடுத்து கூறினார். அவருடன் கவுன்சிலர் ராஜேஷ் புல்வாரியா, ஜெ.முத்துகுமார். பெரியசாமி, கிலமண்ட் இளங்கோ, தர்மா, கே.இ.சாமி, சமத் கான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

095788
Users Today : 3
Total Users : 95788
Views Today : 6
Total views : 415156
Who's Online : 0
Your IP Address : 3.133.108.103

Archives (முந்தைய செய்திகள்)